இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் பழனி திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதன் பிறகு கோலிவுட் திரையில் துப்பாக்கி, மாற்றான் போன்ற படங்களில் முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்து முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் ”இந்தியன் 2” திரைப்படத்தில் உலகநாயகனுக்கு மனைவியாக இவர் நடித்து வருகிறார். இதுபோக இவர் கருங்காப்பியம் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இதன் திரை வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவர் தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
IND vs AUS: “இன்னும் 4 ரன்கள் எடுத்தால் போதும்”…, ஆசிய அளவில் சாதனை படைக்க இருக்கும் ரோஹித் சர்மா!!
அதில்” தான் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளன நிலையிலும் கூட சினிமாவில் தனக்கு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் என்னதான் தான் கெரியரில் ஆக்ட்டிவாக இருந்தாலும் தன்னுடைய குழந்தை நீலுடன் அதிக நேரம் செலவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழில் தான் நடித்த ”நான் மகான் அல்ல” திரைப்படம் தான் கோலிவுட் சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறியுள்ளார்.