பிரபல நடிகையான ஜோதிகா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஜோதிகா:
90ஸ் காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை ஜோதிகா. குஷி, பூவெல்லாம் உன் வாசம், பூவே உனக்காக போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்த ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது வரை பலருக்கும் எடுத்துக்காட்டாக இந்த ஜோடிகள் வலம் வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஜோதிகா ஆரம்பகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது சின்ன வயதில் இருந்தே வீட்டுக்கு செல்ல பிள்ளை இவர் தானாம். வெளியே போகாமலே வளர்த்துள்ளார். அதன் பிறகு தான் அவரது அக்கா நக்மா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் இவரும் சினிமாவில் கால் பதித்துள்ளார். ஆனால் தமிழே தெரியாமல் எப்படி நடிப்பது என்று மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
குயின்சி செய்த அந்த காரியம்.,வாழ்க்கையில் இதுவரை அவர் அனுபவிக்காத தண்டனையை கொடுத்த பிக்பாஸ்!!
அப்பொழுது இயக்குனர் வசந்த் தான் ஜோதிகாவிற்கு டீச்சர் போல அனைத்து விஷயங்களையும் சொல்லி கொடுத்துள்ளார். மேலும் நக்மாவும் இதையெல்லாம் கடந்து தான் நானும் சினிமாவில் இந்த இடத்துல இருக்கேன் என்று கூறியுள்ளார் ஜோதிகா. அதன் பிறகு தனது விடா முயற்சியால் ஜோதிகா இந்த அளவிற்கு திரையுலகில் சாதனை படைத்துள்ளார்.