ரயிலில் தவறி விழுந்து கொடூரமாக பலியான நடிகை – திரையுலகை உலுக்கிய சோகம்!!

0
ரயில்களில் இந்த பொருட்களை எடுத்து செல்லாதீர்.,, மீறினால் ஜெயில் தான்!!
ரயில்களில் இந்த பொருட்களை எடுத்து செல்லாதீர்.,, மீறினால் ஜெயில் தான்!!

தெலுங்கு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஜோதி ரெட்டி தற்போது ரயிலில் தடுமாறி விழுந்து கொடூரமாக பலியாகியுள்ளார். தற்போது பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜோதியின் மரணம்:

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி. இவர் பல சினிமா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஐதராபாத்தில் வங்கியிலும் வேலை பார்த்து கொண்டுவந்த இவர் சங்கராந்தி பண்டிகை விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பியுள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் ஐதராபாத்துக்கு வரும் போது ரயிலும் இறங்கும் இடத்தினையும் மறந்துவிட்டு அசந்து தூங்கியுள்ளார். தூக்க கலக்கத்தில் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு பதிலாக ஷாட்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

பின்பு மீண்டும் பழைய ஸ்டேஷனுக்கு செல்ல வேக வேகமாக ரயிலில் ஏறியுள்ளார். தூக்கக்கலத்தில் இருந்ததால் கால் தடுமாறி பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி பலத்த காயமடைந்த ஜோதி அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி உயிரிழந்துள்ளார். இவரது கொடூர மரணம் ஆந்திரா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here