Tax கட்டாததால் ஐஸ்வர்யா ராய்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!!

0
Tax கட்டாததால் ஐஸ்வர்யா ராய்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!!
Tax கட்டாததால் ஐஸ்வர்யா ராய்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உலக அழகி பட்டத்தை பெற்று தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் சங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் அறிமுகமாகி, எந்திரன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஹெக்டார் நிலம் இருக்கிறது.

ஹாப்பியான நியூஸ் ரசிகர்களே.., இன்னும் 100 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் மர்ம முடிச்சு அவுர போகுது!!

அந்த நிலத்திற்கு கடந்த ஆண்டு முதல் தற்போது வரை நில வரி செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வருவாய் துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீஸில் அடுத்த பத்து நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here