இந்திய சினிமா துறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பழமொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் நடித்து பெரும் புகழை அடைந்த நிலையில் தற்போது இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கல்யாண வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மற்றொரு பக்கம் இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ”காந்தாரி” என்ற திரில்லர் நிறைந்த நகைச்சுவை திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் திரையில் வெளியானது. இதில் ஹன்சிகா மிகவும் கோபத்துடன் இருப்பது போன்று தோற்றம் அளிக்கிறார்.
சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்., விம்சர்சையாக கொண்டாடிய மாவீரன் படக்குழுவினர்!!
மேலும் இப்படத்தை கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான், சேட்டை போன்ற பல நல்ல படங்களை தமிழ் திரைகளுக்கு தந்த இயக்குனர் கண்ணன் இயக்கியுள்ளார்.இப்படம் வரும் மாதம் 23ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஹன்சிகா இயக்குனர் மற்றும் பட குழுவினருடன் இணைந்து சென்னையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.