திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கௌதமி. இவர் தமிழில் நடித்து கடைசியாக வெளியான பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் விஷால் நடித்து இயக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கௌதமியின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட்டில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை கௌதமி இன்ஸ்டாவில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
ஆலியா மானசா நடிக்க இருக்கும் புது சீரியல் இதுதான்.., வெளிவந்த முழு தகவல்!!
இதில் மும்பை கடற்கரையில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பில் இருப்பதாக தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து கௌதமி ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகின்றனர்.