கோலிவுட் திரையில் சார்பட்டா படத்தில் ஹீரோயின் மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பவர் தான் நடிகை துஷாரா விஜயன். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் பாக்சிங்கின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்த திரையுலகமே வாயடைத்து போனது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இப்படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் துஷாரா interview ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் தான் சினிமாவில் சந்தித்து வந்த சில பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து தான் மீண்டு வந்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இவர் சினிமாவுக்குள் வருவதற்கு இவருடைய அப்பா முதலில் ஆதரவு கொடுக்கவில்லையாம், அதன் பிறகு தான் இவரது கெரியருக்கு உறுதுணையாக இருக்க தொடங்கினார் என கூறியுள்ளார்.
பொதுத்தேர்வு மாணவர்களே., மே 22ம் தேதி முதல் உதவித்தொகைக்கான விண்ணப்பம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!
மேலும் என்னுடைய தன்னமிக்கை மற்றும் விடாமுயற்சி மட்டும் தான் இந்த அளவிற்கு என்னை கொண்டு வந்துள்ளது என கூறியுள்ளார். பலர் என்னிடம் உன்னால் இதெல்லாம் பண்ண முடியாது, நீ செய்வது எதுவும் சரி இல்லை என்பது மாதிரி கூறி உள்ளனர், ஆனால் அதையேல்லாம் நான் என கண்டு கொள்ள மாட்டேன். என்னுடைய திறமையை மட்டும் தான் நான் நம்புகிறேன். மேலும் நாம் செய்கிற ஒவ்வொரு விஷயத்துக்கும் அடுத்தவர்களுக்கு நிரூபிக்க எந்த அவசியமும் இல்லை என பேசியுள்ளார்.