சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு சீரியல் நட்சத்திரங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை திவ்யா ஸ்ரீதர்:
சின்னத்திரையில் கேளடி கண்மணி, செவ்வந்தி போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பின்னர் அர்னவுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திவ்யாவிடம் இருந்து விலகும் நோக்கத்தில் அவரை கொடுமை படுத்தியதாக கூறி சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர் அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறை. பின் ஜாமீன் பெற்று வந்த அர்னவ் திவ்யாவை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
என்னடா சிக்கன் மட்டன்.., இந்த pepper fry ஒன்னு போதும்.., மற்ற அசைவ உணவுகளை மிஞ்சிடும்!!
தற்போது இருவரும் சீரியலில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் மாசமாக இருந்த திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது அர்னவால் மாசமான திவ்யா ஸ்ரீதருக்கு தற்போது அவர் நடித்து வரும் செவ்வந்தி சீரியல் நட்சத்திரங்கள் வளைகாப்பு நடத்தி உள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை பகிர்ந்து நன்றி கூறியுள்ளார்.
View this post on Instagram