ஹிந்தி திரைப்படங்களில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோன். பெங்களூருவைச் சேர்ந்த நடிகை தீபிகா சினிமாவில் அறிமுகமானது ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படத்தில் தான். இதையடுத்து பாலிவுட்டில் தடம் பதித்த நடிகை தீபிகா தனது திறமையின் மூலம் உச்சம் தொட்டார்.
நடிகை தீபிகா படுகோன் தமிழில் வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இப்படி, ஹிந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது 37 வயதான நடிகை தீபிகா தனது திருமணத்திற்குப் பின்பும் உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘எனது வாழ்வில் கேட்ட சிறந்த கதை இது’….,இயக்குனர் செல்வராகவன் நெகிழ்ச்சி….,
இப்படி இருக்க, ஒரு திருமண வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்த சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் தீபிகா. அதாவது, சிறு வயது முதல் வெவ்வேறு இடங்களில் பிறந்து, வளர்ந்த இருவரது எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால், கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்படுவது வழக்கம் தான். இந்த நேரங்களில் அவர்கள் பொறுமையோடு நடந்து கொண்டால் போதும் என கூறியுள்ளார்.