ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்வீர் சிங்கை -தீபிகா படுகோன்:
ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் தான் தீபிகா படுகோனே. இவர் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா தமிழில் இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார். அதற்கு பின்பு அவர் எந்த திரைப்படமும் தமிழில் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கை 6 வருடங்களாக உருகி உருகி காதலித்து கடந்த 2018ல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் இரண்டு வருடங்களாக எந்தவித பிரச்சனையும் இன்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பண்ண போவதாக இணையத்தில் தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து அண்மையில் ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் சர்ச்சையான போது தீபிகா படுகோனையும் பலர் விமர்சித்தனர். இதுவும் தகராறுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். ஆனால் பிரியப் போவதை இருவர் தரப்பிலும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
கல்யாணம் முடிஞ்சி அதுக்குள்ள குட் நியூஸ் சொல்லிடீங்களே மஹாலட்சுமி-ரவீந்தர்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
இந்த நிலையில் ரன்வீர் சிங் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு தீபிகா படுகோன் ஆங்கிலத்தில் ediblel என்று கமெண்ட் செய்துள்ளார். அதாவது புகைப்படத்தை பார்த்தவுடனே சாப்பிடணும் போல இருக்கிறது!! என்று கூறியுள்ளார். இந்த கமெண்டை பார்த்த ரசிகர்கள் அவர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.