சின்னத்திரை நடிகையான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல மர்மங்கள் வெளியாகிக்கொண்டு உள்ளது. அதாவது சித்ராவிற்கு ஒரு அரசியல் பிரமுகர் தொல்லை கொடுத்து கொண்டே இருந்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சித்ரா
சீரியல் நடிகையான சித்ரா மரணத்தில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஹேமந்த் சின்னத்திரை நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு சென்று குடித்து விட்டு கலாட்டா செய்துள்ளார். இது சித்ராவின் மன உளைச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
‘ஹேமந்த் கெட்டவன் என தெரிந்தும், ஏன் சித்ரா அவரை திருமணம் செய்ய வேண்டும்?
மேலும் சித்ராவின் மொபைலை ஆராய்ந்ததில் அதில் அவர் பல முறை தினேஷ் என்பவருக்கு கால் செய்துள்ளார். யார் இந்த தினேஷ் என்று விசாரித்ததில் அவர் சித்ராவால் நியமிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்று தெரிய வந்தது. சித்ரா சீரியலில் மட்டும் நடிக்காமல் இடைப்பட்ட நேரங்களில் கடை திறப்பு விழா போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் அவர் பரிசு பொருள் விற்பனையகத்தை அக்டோபர் மாதத்தில் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ இளம்பை தமிழ் செல்வனும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஜனவரி 15 வரை பல நிகழ்ச்சிகளுக்கு தேதி ஒதுக்கி வைத்துள்ள சித்ரா, இப்படி தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணம் என யோசித்து வந்த நிலையில் அவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் யாரோ தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒரு அரசியல் பிரமுகர் இந்த புத்தாண்டை தன்னுடன் கொண்டாடும்படி வற்புறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பல நபர்களிடம் இருந்து சர்ச்சைக்குரிய பல குறுஞ்செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் அவர்களில் யார் சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருப்பார்கள் என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சித்ராவின் இன்ஸ்டாகிராம் மொபைல் நம்பர் தினேஷ் உடன் தான் இருந்திருக்கிறது. மேலும் பெரம்பலூர் சென்று வந்ததற்கு பிறகு தான் அரசியல் பிரமுகரிடம் இருந்து இந்த குறுஞ்செய்திகள் வந்துள்ளது.