‘சித்ரா மட்டும் இல்லை, ஹேமந்த் வலையில்’ – போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

0

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல மர்மங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் மட்டுமல்ல. ஹேமந்த்தின் சித்து விளையாட்டை பற்றியும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்ரா தற்கொலை:

இந்த வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். அதுவும் முக்கியமாக திரையுலக பிரபலங்களின் மரணம். வடிவேல் பாலாஜி, எஸ்.பி.பி என பலரையும் இழந்துள்ளோம். இப்பொழுது சின்னத்திரை நடிகை சித்ரா. இவரின் தற்கொலை பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இவரது கணவர் ஹேமந்த் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது ஹேமந்த் கொடுத்து வந்த டார்ச்சரால் தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதுவும் கதிருடன் முத்த காட்சிகளில் நடித்தது தான் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரக்சனும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை நாட்கள் நடந்த விசாரணையில் போலீசார் தரப்பில் இருந்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹேமந்த் ஆரம்பத்தில் இருந்தே ஆடம்பர பிரியராகவே இருந்துள்ளார்.

அவரது அப்பா சாதாரண டிரைவர் தானாம். அதன் பிறகு சிங்கப்பூரில் வேலை கிடைத்து சென்றதால் அதில் கிடைத்த பணத்தை வைத்து ஆடம்பரமாக இருந்துள்ளார். வீட்டில் செல்லப்பிள்ளை வேறு. அம்மாவின் அதட்டலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல்வாதி மகன்கள் என பலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பப், டிஸ்கோ என சுற்றித் திரிந்துளார்.

மேலும் அவர்களுடன் போட்டோ எடுத்து தன்னை தொழிலதிபராகவே காட்டியுள்ளார். இதில் தான் சித்ராவும் ஏமாந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதால் பலரிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார்.

‘பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ நேரமில்லை’ !!

நாளடைவில் அவர்கள் ஹேமந்த்திடம் பணத்திற்காக சண்டை போட சித்ராவிடம் பணத்தை வாங்க ஆரம்பித்துள்ளார். இது சித்ராவிற்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக தான் இருந்துள்ளது. இதை தான் சித்ராவின் அம்மாவும் சொல்லி இருந்தார். ஹேமந்துக்கே நிறைய பணத்தை செலவு செய்து வந்ததாக கூறியிருந்தார். இப்படி மோசடி பேர்வழியாகவே ஹேமந்த் இருந்துள்ளார். சித்ராவை டார்ச்சர் செய்து வந்த அந்த அரசியல்வாதி யார் என்றும் தெரியவில்லை.

இதில் ஹேமந்த் அப்பா வேறு யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்கிறீர்கள் என்றும் கூறியிருந்தார். இது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதையெல்லாம் தெரிந்தும் சித்ரா ஏன் அவரை பதிவு திருமணம் செய்துகொள்ள வேண்டும்?? இவ்வாறு பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் உள்ளன. நாளுக்கு நாள் சித்ராவின் மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here