சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா:
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. இவர் நடிப்பில் மட்டுமல்ல பாடுவதிலும் வல்லவர். இந்த மாதிரியான பல திறமைகளை கை வசம் வைத்திருந்தார் சித்ரா. 8 வருட போராட்டங்களுக்கு பிறகு இவர் திரையுலகில் அதிக புகழை அடைந்துள்ளார். மேலும் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவருக்கு லாக்டவுன் சமயத்தில் தான் நிச்சயம் நடைபெற்றது. விஜய் டிவியில் கூட இவர்களுக்கு நலங்கு வைக்கும் விழா வைத்தனர். இப்படி சந்தோஷமாகவே இருந்த சித்ராவிற்கு அப்படி என்ன தான் ஆனது. இது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. ஹேமந்த் நல்லவரே கிடையாது என்று சிலர் கூறி வருகின்றனர்.
‘ஹேமந்த் சரியான பொம்பள பொறுக்கி, பழகாத பொண்ணுங்க கிடையாது’
சித்ராவின் ரசிகர்கள் பலரும் அவரின் இறப்பை தாங்கமுடியாமல் கதறியும் வருகின்றனர். சித்து இல்லாமல் எப்படி அந்த சீரியலை நாங்கள் பாப்போம் என்று வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் முகத்தில் இருக்கும் நகக்கீறல் அவரது நகத்தால் கீறியதே என்றும் கூறியுள்ளனர். தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் & திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.