முன்னாள் பிரபல நடிகை பானுப்பிரியா தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக சமீபத்திய தெலுங்கு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை பானுப்பிரியா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக கார்த்திக் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னர் பெண்கள் மட்டும் என்ற படத்தில் கடைசியாக லீடு ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பின்னர் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு நினைவாற்றல் குறைந்து கொண்டே வருகிறது என்று கூறி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
விஜய்க்கு பின், flop ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்ட தில் ராஜு? நம்ம தலைக்கு தில்ல பாத்தியா?
அதாவது அவர் கூறியதாவது, கடந்த கொஞ்சம் காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சொல்ல போனால் என்னுடைய நினைவு ஆற்றல் குறைந்து வருகிறது. எனக்கு பிடித்த செயல்கள் மறந்துவிட்டது. மேலும் டான்ஸ் கூட ஆட முடியவில்லை. அதுமட்டுமின்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை மறந்து திகைத்து நின்றேன் என்று கூறியுள்ளார். மேலும் நான் எனது கணவரை விவாகரத்து செய்ததாக செய்திகள் பரவின, அதுவும் பொய்யானது. எங்களின் தொழிலுக்காக பிரிந்து இருந்தோம் என்று கூறியுள்ளார்.