மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை அர்பிதா முகர்ஜியின் கொல்கத்தா இருக்கும் வீட்டில் கிட்டத்தட்ட ரூ. 21.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் பறிமுதல்:
கடந்த 2004ம் ஆண்டு மாடலாக தன் கெரியரை துவங்கினர் அர்பிதா முகர்ஜி. அதிலிருந்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கியது. நடிகை அர்பிதா தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அந்த நபர் யார் என்பது இன்றும் வரை தெரியவில்லை.
அர்பிதா ஆறு மொழிகளில் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது . பெங்காலி படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தொடர்ந்து வருகிறார். அதன் பிறகு 2012ம் ஆண்டுக்கு பிறகு தெலுங்கு திரையுலகில் நடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆசிரியர் ஊழியர்கள் நியமிப்பதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.
இதனை தொடர்ந்து ஜூலை 23ம் தேதி காலை மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி ஊழல் செய்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் பார்தா சாட்டர்ஜி உடன் நெருங்கி பழகிய நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்து ரூ. 21.2 கோடி ரொக்கம், ரூ. 79 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்