சமீபத்தில் மலையாளம் மொழியில் வெளியான ‘இரட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த அஞ்சலி தற்போது இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்கத்தில் உருவாகும் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நடிகை அஞ்சலிக்கு 50 ஆவது திரைப்படம் ஆகும். இந்த படத்தை கிரீன் அம்யூஸ்மென்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி3 புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
ஸ்ரீதர் ஜி ஒளிப்பதிவாளராகவும் மற்றும் பிரவீன் கேஎல் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். தரண் குமார் இசையமைக்கிறார். தற்போது ‘ஈகை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஹிந்தியில் ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’…..,படக்குழு கொடுத்த அப்டேட்….,
இந்த நிலையில், ‘ஈகை’ திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பிரபலங்கள் ட்விட்டர் மூலம் வெளியிட, அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.