ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா. ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் தன் வேறு பரிமாணத்தை காட்டியவர் ஆண்ட்ரியா.
இவர் பாடிய இது வரை இல்லாத உணர்வு முதல் ஒ சொல்றியா மாமா பாடல் வரை ரசிகர்கள் மத்தியில் படு பாப்புலர் ஆனது. தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சில காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரின் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் வட்டம், மாளிகை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.