சினிமா துறையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தனது சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது மிகவும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது குளோஸ் அப்பில் எடுத்த செல்பி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
இசை துறை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கண்ணும் கண்ணும் நோக்கியா, பூக்கள் பூக்கும் தருணம்,நோ மணி நோ ஹனி உள்ளிட்ட பல பாடல்களை பல முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். அவரின் காந்த குரல் மூலம் பலரை தன்னுடைய பாடலுக்கு ரசிகர்களாக்கினார். திரையில் பின்னணி பாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு சில படங்களிலும் நடித்து மெல்ல மெல்ல படங்களில் தன்னுடைய பயணத்தை விரிவுபடுத்தினார்.
அந்த வகையில் அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்த படம் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம். அவரின் படங்களும் கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் இருக்காது. கவர்ச்சி மட்டுமல்லாமல் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் சினிமா துறையில் ஒரு சிலருடன் கிசுகிசுக்கப்பட்டும் உள்ளார் . மேலும் இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் வடசென்னை படமாகும்.
காலை விரித்து மஜாவாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. ரசிகர்களின் கண்ணை பறித்த கலர்புல் போட்டோ!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது முடியால் தன்னுடைய கண்களை மறைத்து கொண்டு குளோஸ் அப்பில் ஒரு மார்க்கமாக செல்பி எடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்