
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த ஜோடியாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் ஆலியா சஞ்சீவ். இவர்கள் இருவரும் விஜய் டிவியின் ”ராஜா ராணி” சீரியலில் ஜோடியாக இணைந்து நடித்தனர், அப்போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் ஆலியா அவரது வீட்டின் சம்மதத்தை மீறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன் பிறகு இவரது வளைகாப்பு விஜய் டிவியில் நடத்தப்பட்ட போது அதில் ஆலியாவின் குடும்பத்தார் வருகை தந்து இவருடன் சுமூக உறவில் கூடினர். இப்படி திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வரும் இவர்கள், தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாகவும், இனியா தொடரில் ஆலியா நாயகியாகவும் களமிறங்கி நடித்து வருகிறார்.
இப்படி கெரியர், பேமிலி என இரண்டிலும் பிசியாக இருந்து வரும் இவர்கள் தற்போது youtubeல் தங்களின் 2 வது குழந்தை அர்ஷ் பெயரில் புதிதாக ஒரு கணக்கு தொடங்கியுள்ளனர். அதில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் ஆலியா தனது மகன் அர்ஷை தன்னுடைய ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அட ஆலியாவின் மகன் நன்றாக வளர்ந்து விட்டாரே என்ற கமெண்டை பதிவிட்டு வருகின்றனர்.