ஆல்யாவுக்கு காலில் எப்படி அடிபட்டது என்று உண்மையான காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்யா:
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா. அந்த தொடரில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் கலக்கி வரும் நிலையில், தற்போது ஆல்யா மானசாவும் இனியா சீரியல் மூலம் சன் டிவியில் நுழைந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி சீரியலில் இருவரும் பிசியாக இருந்து வந்தாலும், தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஆல்யாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் பலத்த காயம் ஏற்பட்டது என்று சோசியல் மீடியாவில் பரவி வந்தது. அண்மையில் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.
காமெடி நடிகர் சூரி இரண்டாவது திருமணமா?? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்!!
இந்த நிலையில் அவருக்கு காலில் எப்படி அடிபட்டது என்று உண்மையான காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆல்யாவுக்கு இந்த எலும்பு முறிவு அண்மையில் இவர் கபடி விளையாடும் போது ஏற்பட்டுள்ளதாம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆல்யா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram