பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக கலக்கிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி குறித்த முக்கிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி :
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். அதுமட்டுமின்றி அலை கடல் என்ற பாடலில் வரிகளுக்கு ஏற்ப நடனமாடி இளைஞர்களை கட்டி இழுத்தார். தற்போது இவர் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி என்ற திரைப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் 4 கோடிகளை வசூலித்துள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நடந்த ஒரு காரியத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, நகைச்சுவை கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. காட்டா குஸ்தி படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ளேன். இந்த படம் எனக்கு சவாலாக இருந்தது. எனக்கு நகைச்சுவை காட்சியில் நடிப்பதற்கு வேகமாக வராது. மற்ற காட்சிகளில் நான் வெளுத்து வாங்குவேன். ஆனால் நகைச்சுவை காட்சிகள் மற்றும் என்னால் வேகமாக நடிக்க முடியாது.
தமிழகத்தின் இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!
அதனால் இந்த படம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நபர் என்னை தவறாக தொட்டார். அதனால அந்த நிமிடமே அவரை அடித்து விட்டேன். ஆனால் இந்த நாள் வரை அப்படி யாரும் என்னிடம் அடி வாங்கியது கிடையாது. தற்போதுள்ள சூழ்நிலையில் bad touch பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இது போன்ற பிரச்சனையில் தப்பிக்க பெண்களுக்கு மாற்றம் வருமா என்று தெரியவில்லை. நான் நடித்த கார்க்கி போன்ற திரைப்படத்தில் இது போன்ற விவாதங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.