சமீபத்தில் இரண்டு முறை கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்த பிரபல நடிகை தற்போது மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஆண்ட்ரிலா சர்மா:
பெங்காலி வட்டாரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஆண்ட்ரிலா சர்மா. இவர் Jiyon Kathi, Jibon Jyot, Jhumur உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இப்படி பிசியாக நடித்து வந்த ஆண்ட்ரிலா சர்மா கடந்த நவம்பர் 1ம் தேதி மூளைக்குள் இரத்த கசிவு இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் அவருக்கு உடம்பில் ஒரு பக்கம் செயலிழந்து போனது மட்டுமின்றி கோமாவுக்கு சென்றுவிட்டார். மேலும் அவருக்கு CPR அளிக்கப்பட்ட நிலையில் அவர் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை வென்டிலேட்டர் சப்போர்டில் வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்கவில்லை.
இதனால் நேற்று மதியம் 12.59க்கு அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஆண்ட்ரிலா சர்மாவுக்கு 24 வயது ஆன போதிலும், இப்படி மாரடைப்பில் இறந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் இரண்டு முறை கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.