நாளை வெளியாக உள்ள விருமன் படத்தில் இடம் பெற்ற மதுரை வீரன் என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அப்பாடலை முதலில் பாடிய சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி அது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
விருமன் பாடல்:
முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் நடிகை அதிதி ஷங்கர். இவரின் தந்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் பாடலை அதிதி ஷங்கர் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலால் அதிதி ஷங்கர் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் பல விமர்சனங்களும் தொடர்ந்து ஏழுந்த வண்ணம் உள்ளன. அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, விருமன் திரைப்படத்தில் மதுரை வீரன் பாடலை முதன் முதலில் பாடியது பின்னணி பாடகி ராஜலக்ஷ்மி தான். அதன்பின் அவர் பாடியதை நீக்கிவிட்டு, அதிதி ஷங்கர் குரலில் பாட வைத்துள்ளனர். இந்த செய்தி வெளிவந்த பிறகு அதிதி ஷங்கரை எதிர்த்து பல விமர்சனங்கள் எழுந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இதுகுறித்து ராஜலக்ஷ்மி பேசியுள்ளார் “மதுர வீரன் பாடலை நான் பாடியது உண்மை. அதே சமயம் அதிதி அருமையா பாடுறாங்க. அதனால பாட வச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதாக நினைத்து அதிதியை விமர்சனம் செய்ய வேண்டாம்” என்று ராஜலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.