நடிகர் யோகிபாபு பிசியாக படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யோகி பாபு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. தொடக்கத்தில் பின்னணி நடிகராக நடித்து, படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி வகித்து வருகிறார். மேலும் தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, போன்ற பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடைசியாக நடித்த பொம்மை நாயகி கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் யோகிபாபு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் சுவாமி சண்முகர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
தனுசுடன் கைகோர்க்கும் இயக்குனர்.வினோத்..,இப்படித்தான் கதை இருக்குமா? வேற லெவல் போங்க!!
அவர் வந்த போது அங்கிருந்த மக்கள் அனைவரும் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் நின்ற திருநங்கைகளிடத்திலும், யாசகம் பெறுபவர்களிடமும் அவர் ஆசிர்வாதம் பெற்றார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.