சீரியல் நடிகை விஜே சித்ரா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன், இந்த மாதிரியான செயல்களை தான் செய்து கொண்டிருந்தார் என அவரது கணவர் ஹேமந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.
வெளிப்படை பேச்சு:
சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, இவரது மரணம் குறித்த பின்னணியை இவரது கணவர் ஹேமந்த் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியே தெரிவித்தார். மேலும் தன் உயிருக்கு ஆபத்து, எனவும் போலீசில் புகார் அளித்தார். தற்போது இவர் மேலும் சில திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.
அதாவது ஷூட்டிங் முடித்துவிட்டு சித்ரா திரும்பியதும் அவர் மன உளைச்சலில் இருந்தார் என்றும், அதற்கான காரணம் தனக்கு தெரியும் எனவும் சொல்லியுள்ளார். நான் அவருக்கு பலமுறை சமாதானம் சொல்லியும், அவர் ஆறுதல் அடையவில்லை. பின் குளிக்க செல்வதாக சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. ஹோட்டலில், இன்னொரு சாவி வாங்கி அங்கு பணிபுரிபவருடன் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அவர் பிணமாக இருந்தார். அவரை முதலுதவி செய்து, பரிசோதித்ததில் இறந்துவிட்டார் என தெரிந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்