தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து ரசிகர்களை தனது நகைச்சுவை நடிப்பால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் விவேக். அவருடைய ஒவ்வொரு காமெடியிலும் சில கருத்துக்கள் ஒளிந்திருக்கும். இவருக்கு படத்தின் கதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, சீரியஸ் கருத்துக்களை, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு, காமெடி வார்த்தைகளை திணித்து, பாமர மக்களுக்கு புரியும்படி பாடி லாங்குவேஜ் மூலம் கொண்டு போய் சேர்த்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சினிமாவில் ஒரு பக்கம் இப்படி இருக்க மறுபக்கம் மரக்கன்றுகளை கையில் எடுத்து ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்தார். தற்போது அவர் கொடுத்த மரக்கன்றுகள் வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது. ஆனால் விவேக் என்ற மரம் கடந்த 2021ம் ஆண்டு விழுந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஊரெல்லாம் ஓடி ஆடி மரம் நட்ட மனிதனின், மூச்சு நின்றே விட்டதா? என்று ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதந்தனர்.
ராதிகாவால் ஈஸ்வரிக்கு வந்த ஆப்பு.., பாக்கியா காப்பாற்றுவாரா?? கடைசில கோபியே இப்படி பண்ணிட்டாரே!!!
தற்போது அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் நட்ட மரங்களில் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். மறைந்த நடிகர் விவேக்குக்கு அருள் செல்வி என்ற மனைவி இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர்களுக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி மற்றும் பிரசன்னா குமார் ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இதில் பிரசன்ன குமார் 2015ல் மூளையில் ஏற்பட்ட பிரச்சனையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவேக் அருள் செல்வியை திருமணம் முடிந்து கொஞ்சம் நாட்கள் ஆன போது, இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.