நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் அவர் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து மோகன் தாஸ், ஆர்யன், லால் சலாம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மதுரையில் உள்ள பிரபல தியேட்டரில் மக்களுடன் மக்களாக படத்தை பார்த்து விஷ்ணு விஷால் பேட்டி கொடுத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவர் கூறியதாவது, நான் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. நான் இந்த அளவுக்கு வந்த காரணம் என்றால் அது விமர்சனங்கள் மட்டும் தான். சினிமாவுக்கு வந்த பின்பு தான் உழைக்க ஆரம்பித்தேன். கட்டா குஸ்தி பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பெண்கள் பார்த்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் பெரிய ஹிட் அடிக்கும். இன்னும் வர போகும் நாட்களில் வசூலை அள்ளும். மேலும் நான் சினிமாவுக்கு வந்து 13 வருடம் உழைத்ததின் பலன் வரப்போகும் காலத்தில் எனக்கு கிடைக்க போகுது.
அதாவது ரஜினி சார் கூட நடிக்கிறது என்னோட ட்ரீம். அது லால் சலாம் படத்தின் மூலம் நிறைவேறப் போகுது. அதுக்காக நான் என்னை தயார் செய்து வருகிறேன். நான் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். நான் ஸ்லோவா இருந்தாலும் என் பாதை ஸ்டெடியா இருக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் 2 வது திருமணம் முடித்த அதிர்ஷ்டம் தான் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது மட்டுமின்றி, வெற்றி படங்களாக அமைகிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.