மார்க்ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து..,காயமடைந்த ஸ்டண்ட் மேன்..,50000 நிதியுதவி கொடுத்த விஷால்!!

0
மார்க்ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து..,காயமடைந்த ஸ்டண்ட் மேன்..,50000 நிதியுதவி கொடுத்த விஷால்!!
மார்க்ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து..,காயமடைந்த ஸ்டண்ட் மேன்..,50000 நிதியுதவி கொடுத்த விஷால்!!

கோலிவுட் திரையில் புரட்சி தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் தான் விஷால். இவர் ”சண்டக்கோழி” என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து முக்கிய நாயகனாக தற்போது ஜொலித்து கொண்டிருகிறார். இந்நிலையில் இவர் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படத்தில் ரிது வர்மா ஹீரோயினாகவும் அபிநயா, சுனில், நிழல்கள் ரவி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.இதில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா களமிறங்கியுள்ளார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., வீட்டை விட்டு தெருவில் தஞ்சம் புகுந்த குஷ்பூ.., அவரே வெளியிட்ட பதிவு!!!

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லியில் நடந்து வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் படத்தின் ஸ்டண்ட் மேன் பிரபாஸ் சங்கருக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நேரத்தில் விஷால் அவரது தேவி அறக்கட்டளையில் இருந்து 50000 ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here