தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் இன்று காலை 11:30 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் விக்ரம் தங்கலான் படத்தை தொடர்ந்து அருண் குமார் இயக்கத்தில் சியான் 62 படத்தில் நடிக்க உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தற்போது விக்ரம் பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விக்ரம் சினிமா வட்டாரத்தில் இதுவரை 23 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் இப்போது தங்கலான் படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி அடுத்த நடிக்கவிருக்கும் சியான் 62 படத்திற்காக ரூபாய் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி ஒரே படத்தின் மூலம் தனது மார்க்கெட்டையே விக்ரம் உயர்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.