அண்மையில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் குறித்து ரசிகர் போட்ட ட்வீட்க்கு நடிகர் விக்ரம் ரீ – ட்வீட் பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன்:
ராஜராஜ சோழன் கதையை மையமாக கொண்டு எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப் 30 தேதி திரை காண இருக்கிறது. இதனை தொடர்ந்து டிக்கெட் புக்கிங் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை படம் வெளியான முதல் வாரம் முழுவதும் தியேட்டர் ஹவுஸ் புல் ஆகியதாக கூறப்படுகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தாய் 40 வருடங்களுக்கு பிறகு தியேட்டருக்கு வந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க இருக்கிறார். என் தாய் மட்டுமின்றி வயதான அனைவரும் காண இருக்கின்றனர். அதனால் தியேட்டர் உரிமையாளர் அவர்களுக்காக சகல வசதிகளும் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு கொண்டுள்ளார். இந்த பதிவில் நடிகர் விக்ரம் , தயாரிப்பு நிறுவனம் போன்ற சிலரை டேக் செய்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 – விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!
இதனை பார்த்த நடிகர் விக்ரம், உங்களுடைய அன்புக்கும், மற்றவர்கள் மேல் இருக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி ஹரி. இந்த புகழ்பெற்ற படத்தை காண்பதற்கு பெண்களும், வயதான முதியவர்களும் திரை காண இருக்கின்றனர். அதே போல் என்னுடைய தாயும் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வருகிறார் என்று ட்வீட் செய்துள்ளார். தற்போது அந்த ட்வீட் வைரலாக பரவி வருகிறது