விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த தனது ரசிகர் புகழேந்தி திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி சர்ப்ரைசாக கலந்து கொண்டு வாழ்த்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்ப்ரைஸ் செய்த விஜய் சேதுபதி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞரணி தலைவராக இருப்பவர் புகழேந்தி. இவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திண்டிவனத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு முதல் நாள் இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி சர்ப்ரைசாக கலந்து கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த இந்த விழாவில், திடீரென மேடை ஏறிய விஜய் சேதுபதி, புகழேந்தியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதனால், மனம் நெகிழ்ந்த புகழேந்தி மணமேடையில் அழுதுவிட்டார். நடிகர் விஜய் சேதுபதியின் இந்த செயலால், அங்கிருந்த அனைவரும் மகிழ்ந்து போயினர். தற்போது, இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது. இவர் தான் உண்மையான மக்கள் செல்வன் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்