நடிகர் சத்யராஜ் குறித்து, கேப்டன் விஜயகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் பேட்டி:
தமிழ் சினிமாவின் கேப்டன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அரசியல் மற்றும் ஆக்ஷன் சார்ந்த படங்களில் பட்டையை கிளப்பிய இவர் அரசியல் பக்கம், கவனத்தைத் திருப்பி ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருந்தார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எல்லாவற்றிலிருந்தும் விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், இவர் நடிகர் சத்யராஜ் குறித்து பேட்டியில் பேசிய கருத்துக்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தனக்கும் சத்யராஜுக்கும் இடையே 25 ஆண்டுகளாக ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும், ஆனால் அது சினிமா சார்ந்ததாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB…, பிரபல கால்பந்து அணிகளுடன் இணைந்து அசத்தல்!!
சத்யராஜ் மாதிரி ஒரு நல்ல நடிகரை பார்க்க முடியாது. அவர் மகன் சிபி, கூட சத்யராஜின் இந்த இடத்தை பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு சத்யராஜ் ஒரு மிகச் சிறந்த கலைஞன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துகள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.