விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு தொடர்ந்து சிக்கல் வந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இயக்குனர் வம்சி படைப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை ஆந்திர மாநிலத்தில் வெளியிட கூடாது என்று நடந்த சர்சைக்கு நேற்று தான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் புதிதாக ஒரு சர்சையில் வாரிசு படம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வம்சி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் போது 5 யானைகளை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் யானைகளை பயன்படுத்தியதை விலங்கு நல வாரியத்திடம் முன்னுரிமை பெறாமல் இருந்துள்ளனர்.
மனைவியிடம் அந்த விஷயத்தில் அடங்கி போகும் பப்லு…, ,24 வயசு இளசுன்னா சும்மாவா?
இந்த தகவலை அறிந்த விலங்கு நல வாரியம் படத்தின் தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது 7 நாட்களுக்குள் முன்னுரிமை வாங்காமல் யானைகளை பயன்படுத்தியதன் தொடர்பான விளக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.