கோலிவுட் திரையில் ரசிகர்களால் அன்போடு தளபதி என அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் மும்பரமாக இருந்து வருகிறார். இதுபோக அரசியலில் குதிக்க இருக்கும் இவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த வருட இறுதியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வரும் ஜூன் மாதம் அவர்களுடன் நேரடி சந்திப்பை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் குறித்து ஒரு முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறு வயதிலேயே இறந்து போன சகோதரி வித்யாவின்யின் மீது விஜய்க்கு பாசம் அதிகம்.
மாற்றுத்திறனாளிகளை இனி அவமதிக்க கூடாது.., மீறினால் இது தான் கதி.., வெளியான அதிரடி உத்தரவு!!!
இதனால் வித்யாவின் பெயரில் ஒரு பள்ளி கூட்டத்தை இவரது மக்கள் இயக்கம் கட்டியுள்ளது. அதில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த வருடம் + 12 வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக விஜய்க்கு தகவல் கிடைத்துள்ளது . இதனால் இனி இந்த பள்ளிக்கு தேவையான அனைத்தையும் தானே செய்வதாக அப்பள்ளி நிர்வாகிகளுக்கு விஜய் வாக்கு கொடுத்துள்ளாராம். தற்போது விஜய் செய்து வரும் இப்படியான நல திட்டங்களால் தமிழக மக்கள் நெகிழ்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.