நடிகர் விஜய்யின் மகன் கொரோனா பொது முடக்கம் காரணமாக வெளிநாட்டில் சிக்கி இருந்தார், தற்போது அவர் சிறப்பு விமானம் மூலமாக நாடு திரும்பி உள்ளார்.
கொரோனா முடக்கம்:
கனடாவில் படித்து வந்த நடிகர் விஜயின் மூத்த மகன் சஞ்சய், கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் போக்குவரத்து ரத்து காரணமாக நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டார் . இதுமாதிரி நடிகர் விஜய் கவலையுடன் இருந்ததாக தெரிகிறது .
சாத்தான்குளம் போலீஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் – சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது தமிழக அரசு..!
தற்போது போக்குவரத்து சேவைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் சஞ்சய் . 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது . இதனால் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
சேவைகள் ரத்து:
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உள்ளூர், வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்,வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. இந்த திட்டத்தின் மூலம் சஞ்சய் நாடு திரும்பியுள்ளார் . நாடு திரும்பிய அவர் , 14 நாட்கள் நட்சத்திர ஓட்டலில் தன்னை தனிமை படுத்தி கொண்டார் . அது முடிந்தவுடன் வீடு திரும்பினார் .