நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குடும்பத்தை குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் உலக நாயகனுக்கு பிறகு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது ஹீரோ மட்டுமின்றி வில்லன் அவதாரத்திலும் வெளுத்து வாங்கி வருகிறார். அதன்படி அவர் நடித்த விக்ரம், மாஸ்டர் திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நுழைந்த நாள் முதல் இருந்து தற்போது வரை அவரது குடும்பத்தினரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராமல் இருக்கிறார். அதற்கான காரணம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யாவின் சொந்த நாத்தனாரை பார்த்துள்ளீர்களா? போட்டோ உள்ளே!!
அவர் கூறியதாவது, நான் என் மனைவி மற்றும் என் பிள்ளைகளை எந்த ஒரு நிகழ்ச்சிகளும் அழைத்து வராமல் இருப்பதற்கு காரணம், என்னுடைய புகழ் என் பிள்ளைகள் தலையில் விழுந்துற கூடாது என்பதால் தான். அது அவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடக்கூடாது என்றும், தகப்பனின் காசுக்களை பிள்ளைகள் செலவழிக்கலாம். ஆனால் என்னுடைய புகழ் அவர் தலையில் ஏற்றி கொள்வது தவறு என்றும், ஏனென்றால் அந்த புகழ் நான் சம்பாதித்து என்றும் கூறியுள்ளார்.