நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தியதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி:
கோலிவுட்டில் பன்முக நடிகராக மிரட்டி வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் அமோக வெற்றியை தேடி தந்தது. இதை தொடர்ந்து கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கத்ரீனா கைப்புடன் மேரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அவர் தங்குவதற்காக மும்பையில் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்டில் படக்குழுவினர் ஒரு பிளாட் எடுத்து கொடுத்துள்ளார்கள். அதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 30 ஆயிரம் செலவாவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கினின் 50வது பிறந்த நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. தற்போது இவர் படைப்பில் வெளியாக இருக்கும் பிசாசு 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதுவரை யாரும் பார்த்திராத கோபிநாத்தின் திருமண புகைப்படம்.., மனுஷன் எப்படி இருக்காருன்னு பாருங்களே!!
அதனால் மிஷ்கினின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர் மும்பையில் உள்ள படக்குழுவிடம் அனுமதி கேட்டு சென்றுள்ளார். அவர் இல்லாததால் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், தயாரிப்பாளருக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியை நம்பி தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.