நடிகர் விஜயின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நேரத்தில் “நீங்கள் நினைத்தது போல அனைத்தும் விரைவில் நடக்கும்” என விஜய் தன் ரசிகர்களுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரும்படி கடந்த சில வருடங்களாகவே அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்து விதவிதமான போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த விஜய் அரசியல் வருகை குறித்து முடிவு எதுவும் எடுக்காமலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை S.A. சந்திரசேகர் சமீபத்தில் “ஆல் இந்தியா தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக விஜய் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர் ‘எனது தந்தை S.A. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, அக்கட்சியின் நடவடிக்கைகள் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது மற்றும் கட்டுப்படுத்தாது” என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் ரசிகர்களும், நிர்வாகிகளும் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் பனையூரில் உள்ள தனது அலுலவலகத்திற்கு, அதிருப்தியில் இருக்கும், தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை அழைத்து காணொளி மூலமாக விஜய் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் இந்த செய்தி நிர்வாகிகளிடையேயும், ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.