தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் இளைய தளபதி விஜய் தற்போது வேறு மொழியில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதனை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
விஜய்
தனது அப்பா மூலம் திரையுலகில் கால் பதித்து உச்சகட்ட நடிகராக இருப்பவர் தான் விஜய். ஆரம்பத்தில் இவரை எவ்வளவு இழிவாக பேசி இருந்தாலும் தனது விடா முயற்சியால் மக்களின் இளைய தளபதியாக வலம் வருகிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மாஸ்டர் படம் நிலுவையில் இருந்த நிலையில் படம் எப்பொழுது வரும் என்று ஏக வரவேற்பு இருந்து வந்தது.
தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!
படம், அதிரடியாக வெளிவந்து சக்கை போடு போட்டது. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். கொரோனாவால் தற்போது ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் கவலையில் உள்ளனர். மாஸ்டர் படத்தின் நிலை போல ஆகிவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கால் பதித்துள்ளார். அதாவது தோழா படத்தை இயக்கிய வம்சியுடன் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்த படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.