நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், தனது மருமகள் சங்கீதா விஜய் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.
ஷோபா சந்திரசேகர் :
தளபதி விஜயின் அம்மாவான ஷோபா சந்திரசேகர், சோசியல் மீடியா பேட்டிகளில் தன் மகன் விஜய் மற்றும் கணவர் சந்திரசேகர் குறித்து வெளிப்படையாக பேசுவது உண்டு. அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு தான் என்னென்ன கிப்ட் வாங்கி கொடுப்பேன் என்பதையும், அதை எப்படி விஜய்க்கு தருவேன் என்பதையும் தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து தற்போது தன் மருமகளான சங்கீதா விஜய் குறித்த, பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது குழந்தையை வளர்ப்பதில், அவ்வளவு சிறப்பாக செயல்படும் ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை. ஏனென்றால் தனது இரண்டு குழந்தைகளையும் அவர் எப்படி வளர்த்தார் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
கயல் சீரியலில் Entry கொடுத்த முக்கிய பிரபலம்.,அப்போ சஞ்சீவ் Chapter அவ்வளவு தானா? லீக்கான அப்டேட்!!
அவங்க வீட்டில் வேலைக்கு எத்தனை ஆட்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு, ஏதாவது கொடுக்க வேண்டுமென்றால் அதை அவர் தான் எடுத்துச் செல்வார். ரொம்பவும் கவனமுடனும், அக்கறையுடனும் குழந்தைகளை கவனித்துக் கொள்வார். அவரின் இந்த வளர்ப்பு முறையை பார்த்து நானே பல இடத்தில் வியந்து போய் இருக்கிறேன். இதனால், இந்த விஷயத்தில் என் மருமகளை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.