நடிகர் விஜய்யின் தாயும், பிரபல இயக்குனர் எஸ் ஏ சி – யின் மனைவியுமான சோபா சந்திரசேகர், விஜய்யுடன் போனில் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வைரல் கருத்து :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். தற்போது இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் வேலைகளில் விஜய் பிஸியாக இருப்பதால், தன் குடும்பத்துடன் கூட நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் விஜய்யின் தாயான சோபா, பிரபல தனியார் யூடியூப் சேனலின் குக்கிங் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அங்கிருந்து படி விஜய்க்கு போன் செய்த அவர், இங்கு சர்க்கரை பொங்கலை பார்த்ததும் உன் ஞாபகம் வந்தது, நேரில் தான் பார்க்க முடியவில்லை, போன்லையாவது பேசலாம் என்று தான் உனக்கு கால் செய்தேன் என தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
வாரிசை தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்.., தளபதிக்கு ஸ்கெட்ச் போட்ட உதயநிதி.., வெளியான அப்டேட்!!
நீ சென்னை திரும்பியதும், உனக்கு பிடித்த சர்க்கரை பொங்கலை செய்து கொண்டு வந்து உன்னை பார்க்கிறேன் எனக் கூறினார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.