தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவில் பிசியாக இருந்து வரும் நிலையில், சமீப காலமாக இவர் அரசியலுக்கு வர போகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் அவரின் நடவடிக்கைகளும் இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதன் அடித்தளமாக விஜய் நடத்தி வரும் மக்கள் இயக்கம் சார்பாக கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து அவர்களை வைத்து ஏழை எளிய மக்களுக்கு தளபதி உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கொடை அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து கௌரவிக்க வேண்டும் என்று கட்டளை விட்டிருந்தார்.
இந்நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தொகுதி வாரியாக பிரித்து அதில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த், வருகிற 17 ஆம் தேதி அன்று நீலாங்கரையில் உள்ள RK Convention Center-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தளபதி விஜய் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குவார் என்று கூறியுள்ளார்.