லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்:
மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் லியோ. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் சாதனை படைக்கும் எனவும், உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனையை நிகழ்த்தும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த அளவிற்கு லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் காஷ்மீருக்கு சென்று கிட்டத்தட்ட 52 நாட்கள் ஷூட்டிங் எடுத்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பட குழுவினருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அறிவிப்பு வெளியானது. அந்த நடுக்கத்தால் ஒரு சஸ்பென்ஸும் வெளியே வந்துள்ளது. அதாவது நடிகர் கதிர் இப்படத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு மறைமுகமாக வைத்திருந்தனர். ஆனால் படக்குழுவினர் தங்கிருந்த ஹோட்டலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஹோட்டலில் இருந்து வெளியே ஓடிய போது நடிகர் கதிரும் இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக சஸ்பென்ஸ் உடைந்து போனது.இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.டி.எம் வடிவில் நவீன முறையில் வீடு தேடிவரும் வாக்காளர் அட்டை!!!
அதாவது நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதற்காக ஸ்பைஸ் ஜெட் தனி விமானத்தை பட குழு வாடகைக்கு எடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வு எடுத்த பின்னர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.