நடிகர் விஜய் தற்போது வரை தனது நற்பணி மன்றங்கள் மூலமாக பல நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இவர் அனைவரும் வியக்கும்படி ஒரு காரியத்தினை செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
“தளபதி” விஜய்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் தான் நடிகர் “தளபதி” விஜய். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். தனது தந்தை ஒரு இயக்குனர் என்ற காரணத்தினால் இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. இவர் தனது கடின உழைப்பினை காரணமாக தான் இன்று வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
அஜித்தால் அவரது ரசிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – போலீசில் வழக்கு பதிவு!!
இவர் ஒரு நல்ல நடிகர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவர் சத்தமே இல்லாமல் தனது வருமானத்தின் ஒரு பகுதியினை ஏழை மற்றும் எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார். அது குறித்து சமூக ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் அவருக்கு என்றுமே உடன்பாடு கிடையாது. அப்படி அவர் நினைத்தாலும், அவரது உதவிகள் பெரிதாக இருக்கும் போது அது ஊடகங்களுக்கு தெரிந்து தானே ஆகும்.
அப்படி இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு மிக பெரிய நல்ல காரியத்தை செய்துள்ளார். அது என்னவென்றால், 18 ஏழை பெண்களுக்கு 51 சீர்வரிசையுடன் இலவச திருமணம் செய்து வைத்துள்ளார்.
16 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இது போல ஒரு நல்ல காரியத்தினை செய்திருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுவே அவர் நடத்தி வைத்த முதல் இலவச திருமணமும் ஆகும். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே போல் நடிகர் விஜய்யை நினைத்து ஆச்சரியமும் அடைந்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.