சொகுசு கார் விவகாரத்தில் நடிகர் விஜய் மீது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கூறி இருந்தார். ஆனால் நடிகர் விஜய் அக்கருத்துக்களை நீக்க வேண்டும் என மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அந்த ஒரு விஷயத்தை செய்ய மறுக்கும் தனுஷ்!!
சொகுசு கார் விவகாரம்:
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு ரக காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, அந்த காருக்கு நுழைவு வரி செலுத்துமாறு கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, காரை இறக்குமதி செய்த போது அதற்கான வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் முறையாக தகுந்த நேரத்தில் வரிகளை செலுத்தி விட வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார் நீதிபதி. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு வெற்றி கிடைத்து உள்ளது. மேலும் நீதிபதி தெரிவித்த தவறான கருத்துகள் நீக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்