கோலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நாயகியான வாணி போஜன், கவர்ச்சியாக நடிப்பது குறித்த முக்கிய கருத்து ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
வாணி போஜன் பேச்சு:
சின்னத்திரையில் அறிமுகமாகி, ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என பெருமையுடன் அழைக்கப்பட்ட இவர், வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மகான் படத்தில், இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்ட நிலையில் அந்த படத்தில் இவர் நடித்த காட்சிகள் எல்லாம் எடிட் செய்யப்பட்டு தூக்கப்பட்டது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த வாணி போஜன், தற்போது கவர்ச்சி குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, கவர்ச்சியாக நடிப்பதில் தப்பில்லை என்றும், அது ஒரு எல்லைக்கு மேல் மீறினால் தான் தவறு என்றும் குறிப்பிட்டார். சேலை கட்டுவது கூட கவர்ச்சி என்றால் என்னதான் செய்வது. காலத்திற்கு ஏற்ப நம் சிந்தனையும் மாற வேண்டும் என பேசி உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.