நகைச்சுவை நடிகர் வடிவேலு வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்து விட்டதாகவும், அவரின் இந்த செயல் கூடிப்போனதாகவும் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை விமர்சித்துள்ளார்.
நடிகர் விமர்சனம்:
கோலிவுட்டின் நகைச்சுவை நடிகரான, வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. குறிப்பாக படத்தில் வடிவேலுவின் தலையீடு அதிகம் இருந்ததால், தான் படம் பிளாப் ஆனதாக பலரும் தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் முத்துக்காளை, இவர் குறித்த பல உண்மைகளை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது அவருடன் சேர்ந்து நடிக்கும் போது, இந்த காமெடி ஹிட் ஆகணும் அவரும் ஹிட் ஆகணும் என்று தான் நாங்கள் நடிப்போம். ஆனா அவருக்கு அந்த பொதுநலம் இருக்காது.
இயற்கை வர்ணனையுடன்.., காதல் மிளிர மெய்சிர்லிக்க வைக்கும் சாகுந்தலம்.., ட்ரைலர் ரிலீஸ்!!
இப்பதான் வடிவேலு வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பிச்சிருக்கு. இனி சினிமாவில் அவர் நிலையான இடத்தை பிடிக்கிறது சிரமம் தான். மக்கள் இப்போ எதை வேணும்னாலும் தூக்கி போட ரெடியாகிவிட்டார்கள். இனி போட்டி போட்டு, நடித்தால் மட்டுமே இங்கு நீடிக்க முடியும். வடிவேலுக்கு எல்லாம் முடிந்து விட்டது என தனது மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துள்ளார்.