நகைச்சுவை நடிகர் வடிவேலு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். அவர் ஒரு புதிய பரிணாமத்துடன், புதிய வடிவேலுவாக ஒரு புதிய படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளார்.
நடிகர் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் நகைச்சுவையை உலக அளவில் அறிமுகப்படுத்தியவர். சினிமாவில் ஒரு நடிகருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களோ அந்த அளவுக்கு ரசிகர்களை கொண்ட ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலு தான். கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த காலத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, உலகம் போற்றும் நடிகராக இருந்து வருபவர் வடிவேலு.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 30 ஆண்டுகளாகியும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவரது நகைச்சுவையை ரசிக்காதவர்கள் என்று ஒருவரும் இருக்க முடியாது. ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் வடிவேலு. கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படத்தின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார் இவர்.
‘இவ்வளவு அழகா காதலை சொன்னா எப்படி வேணாம்னு சொல்றது’ – புகழின் காதலுக்கு ஓகே சொன்ன பவித்ரா!!
ஆனாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டபாடில்லை. மீம்ஸ் வழியாகவும் ட்ரோல் வீடியோக்கள் வழியாகவும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருந்தார் வடிவேலு. இந்நிலையில் நடிகர் வடிவேலு மீண்டுமாக சினிமாவில் நடிக்க உள்ளாராம். அதுவும் நடிகராக நடிக்க போகிறார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படத்தில் வடிவேலு நடிக்க போகிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.