
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் மா மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருடைய கடைசி படம் என்று சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதற்கு முழு காரணம் அவர் முழுவதுமாக அரசியலில் தன்னை அர்ப்பணிக்க இருக்கிறார். இவர் நடிப்பில் 4 வருடங்களாக உருவான கண்ணை நம்பாதே திரைப்படம் திரைக்கு வர ரெடியாகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் விழாவில் பேசிய அவர், இப்படத்தை அருள்நிதி தான் எனக்கு Refer செய்தார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(13.03.2023) – முழு விவரம் உள்ளே!!
இப்படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாக கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம். மேலும் நான் நான்கு ஆண்டுகளாக உழைத்ததால் தான் இப்ப அமைச்சராக பொருட்பேற்றுள்ளேன். அதுமட்டுமின்றி, ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து நான் விலகிவிட்டேன். எனவே சினிமா துறை சம்பந்தமான யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.