இந்திய சினிமா துறையில் நடிகராக அறிமுகமாகி தற்போது இயக்கம், தயாரிப்பு, பின்னணி பாடகர் என ஏகப்பட்ட திறமைகளுக்கு சொந்தக்காரராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இந்நிலையில் இவர் நடித்த திரைக்கு வர உள்ள வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதில் இவர் தன்னுடைய இப்படத்தின் அனுபவம் மற்றும் கருத்து குறித்து சில வார்த்தைகள் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி அவர்கள் கொரோனா லாக்டவுனில் கதை சொன்னதாகவும், அதை கேட்ட தான் மறு பேச்சு எதுவும் பேசாமல் ஷூட்டிங் டேட் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் நான் ஆசிரியராக நடிக்கும் போது தான் இந்த வேலை எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் அப்போது மற்றொரு விஷயம் ஒன்றை கூறிய தனுஷ் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சாதி எனக்கு வேண்டாம்.,வாத்தி பட விழாவில் நடிகை சம்யுக்தாவின் தெனாவட்டு பேச்சு!குவியும் பாராட்டு!!
அதாவது தான் இப்படத்தில் கமிட்டாகுவதற்கு முன்னால், எந்த பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்ததாகவும் அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். சினிமா உலகில் ஏகப்பட்ட வித்தைக்கு சொந்தக்காரராக இருந்து வரும் தனுஷுக்கே இந்த நிலைமையா என்ற கருத்து தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இவரின் அண்ணன் செல்வராகவன் நடிக்கும் ”பகாசுரன்” திரைப்படம் அதே தேதியில் திரைக்கு வந்து நேருக்கு நேர் மோத உள்ளது.